மதுவால் மரண ஓவியம்
மதுவால் மரண ஓவியம்
அழகான ஒரு ஊரில் திருமணம் ஆகி ஒரு வருடம் ஆன ஒரு காதல் ஜோடி. மிகவும் அழகான வாழ்க்கை. மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ஆனால் குழந்தை இல்லை.
நாள்கள் செல்ல செல்ல குழந்தை இல்லை என்று குறை சொல்ல தெடங்கினர் .
மனம் உடைந்து போன இருவரும் கோயில் குளம் செல்லாத நாள் இல்லை. வருடம் ஐந்து ஆகியது ஒரு பலனும் இல்லை.
மனம் உடைந்து போன கணவன் சோகத்தை தீர்க்க குடி பழக்கத்தை தெடங்கினான் . கணவன் குடிப்பது பாத்த மனைவி அதிகமாக மனம் வருந்தி அழுது கொண்டே வாழ்க்கையை நடத்தி வந்தாள் .
கணவன் குடித்து குடித்து சாலை ஓரங்களில் விழுந்து கிடக்கும் நிலை. அக்கம் பக்கம் வீட்டில் சண்டை. போதைக்கு அடிமையான நிலை அவன் வாழ்வையும் மாற்றி விட்டது.
இத்தனை சோகத்தையும் தாண்டி இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
ஒரு நாள் மாலை நேரத்தில் கணவன் மது அருந்திவிட்டு வீடு வந்து பார்த்தால் மனைவி வயிற்றுவலியால் துடிப்பதை பார்த்தவுடன் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றான்.
அங்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது இருந்தது.
மருத்துவர் கணவரை அழைத்து உங்கள் மனைவி மூன்று மாத கற்பினியாக இருக்கிறார்கள் என்று. ஆனந்தம் தாங்க முடியாமல் ஆனந்த கண்ணீரில் சிரித்தான்.
குழந்தை பிறந்தது மாதங்கள் புரண்டு ஓடியது. குழந்தைக்கு ஒரு வயது நிரம்பியது ஆனால் கணவன் மது பழக்கத்தை விட்டு விட முடிய வில்லை.
இருந்தாலும் குழந்தையை பார்த்து ஆனந்த அடைந்தார்கள்.
ஒரு நாள் கணவனும் குழந்தையும் விளையாடி கொண்டு இருக்கும் போது தீடிர் என்று கணவன் மயங்கி விழுந்தார். மருத்துவ மனைக்கு கொண்டு சென்று பார்த்தால் குடி பழக்கத்தால் உடல் உறுப்புகள் செயல் படாமல் இறந்த போனான்.
குழந்தை இல்லை என்று அழுதாள்.
கணவனை இழந்து அழுகிறாள்.
சோகத்தை மறக்க குடித்தேன் என்று நெருங்கிய உறவுகளை சோகப்படுத்தாதிர்.
நன்றி.....
Comments
Post a Comment